தமிழ் சினிமா உலகில் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர் . மேலும் நடிகர் அஜித் ,
எந்த விஷயத்திலும் பப்ளிசிட்டி தேடாதவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் கடந்த பத்து வருடமாக அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் இருந்து வருகிறார். அதுவும் ஒரு கட்டத்தில் இவருடைய ஒரு புகைப்படம்,
வந்தாலே அதிசயம் என்று கூறிவந்த நிலையில் , தற்போது அஜித்தின் புகைப்படம் தினமும் வெளியாகி வருகிறது . அந்த வகையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் தினம் தினம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .
மேலும் பப்ளிசிட்டியே தேடாத அஜித் தினம் தினம் புகைப்படம் போடுவதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறதாம். அது என்னவென்றால் அஜித்தின் சக போட்டியாளர்தான் விஜய் . இவர் சினிமா , அரசியல் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் எப்படியாவது ,
இவருடைய பெயர் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இதனால் தானும் ட்ரெண்டிங்கில் இருந்தால்தான் சினிமாவில் நினைத்து நிற்க முடியும் என்று யோசித்த அஜித் தினமும் புகைப்படம் வெளியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது…