அசோக் செல்வன் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இளம் நடிகர் ஆவார். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன் தொடர்ந்து பீட்சா 2 ,தெகிடி, 144, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே ,நித்தம் ஒருவானம், போர்த்தொழில் போன்ற பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் .
குறிப்பாக படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அசோக் செல்வன் . இந்நிலையில் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடிக்கும் போது அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் மீது காதல் வயப்பட்ட நடிகர் அசோக் செல்வன்.
பின்னர் இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர் . அப்படி இவருக்கு திருமணம் ஆனதும் இதெல்லாம் ஒரு மூஞ்சியா இவரை போய் இவர் திருமணம் செய்து இருக்கிறார் என்றெல்லாம் அசோக் செல்வன் ரசிகைகள் வயிற்றெரிச்சலின் கூறிவந்தனர் . ஆனால் இதற்கெல்லாம் ஒரே புகைப்படத்தில்,
பதிலடி கொடுத்திருந்தார் அசோக் செல்வன். இந்நிலையில் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்ய அசோக் செல்வன் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். காரணம், நடிகை கீர்த்தி பாண்டியனின் தந்தையான அருண்பாண்டியனின் மொத்த சொத்து மதிப்பு 120 முதல் 140 கோடி வரை ,
இருக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு மூன்று மகள்கள் என்பதால் இவருக்கு கண்டிப்பாக 40 கோடி சொத்து ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது .ஆனால் நடிகர் அசோக் செல்வனின் மொத்த சொத்து மதிப்பு 10 முதல் 15 கோடி வரை தான் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது…