விஜய் தொலைக்காட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட தரமான கலைஞன் தான் கே பி ஒய் பாலா. கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் கே பி ஒய் பாலா. இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . அந்த வகையில் தமிழில் வெளியான ஜூங்கா, சிக்ஸர் ,புலிகுத்தி பாண்டி ,லாபம்,
பிரண்ட்ஷிப், நாய் சேகர், ரன் பேபி ரன், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் போன்ற பல படங்களில் நடித்திருந்தார் பாலா . இருந்தாலும் சமீப காலமாக இவர் செய்து வரும் உதவிகள் இவரை உயர்ந்த மனிதனாக காட்டிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் மலைவாழ்,
மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது, சென்னை வெள்ளத்தில் மிகுந்த போது 5 லட்சம் கொடுத்து உதவியது, மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு இலவச ஆட்டோ வாங்கி கொடுத்தது என்று அடுக்கடுக்காக உதவிகளை செய்து வந்த பாலா ,
தற்போது ஐந்தாவது ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் முன்னணி நடிகர்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்கோங்க என்று கூறி வருகின்றனர்…