தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். குறிப்பாக இவரால் வளர்ந்த பிரபலங்கள் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் ஒருவராவார் . அந்த வகையில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம்,
ஹீரோவாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் விஜய்க்கு மோசமான வரவேற்பையே பெற்றுத்தந்தது. இதனால் விஜய்யின் இரண்டாவது படமான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது ,
மட்டுமல்லாமல் விஜய்க்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது . இதன் பிறகு தான் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் விஜய். குறிப்பாக அந்த படத்திற்கு விஜயகாந்த் சம்பளம் கூட வாங்க வில்லையாம். இப்படி ஆரம்ப காலகட்டத்தில் விஜய்யை வளர்த்து விட்டு,
அழகு பார்த்து இருக்கிறார் நடிகர் விஜயகாந்த். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த் . தற்போது அவருடைய உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு நுரையீரலில் ஒரு சிகிச்சை,
தேவைப்படுகிறதாம். இந்நிலையில் இந்த செய்தியை எல்லாம் கேட்டும் கூட விஜய் தற்போது வரை விஜயகாந்தை பார்க்க வராதது ரசிகர்களிடையே கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் நன்றி கெட்ட உலகமடா இது என்று கூறி வருகின்றனர்…