ஸ்ருதிஹாசன் ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டு வந்தார் . பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,
தனுஷ் நடிப்பில் வெளியான 3 ,விஷால் நடிப்பில் வெளியான பூஜை ,விஜய் நடிப்பில் வெளியான புலி ,அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் ,சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இவர் கடைசியாக நடித்த லாபம் திரைப்படம் ,
பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் இவருக்கு தமிழில் சுத்தமாக மார்க்கெட் குறைந்தது . இந்த காரணத்தால் தற்போது தெலுங்கு சினிமாவே கதி என்று இருந்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம்,
நடிகைகள் ஃபேன் இந்தியா அங்கீகாரம் பெறுவது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் இதையெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பே நான் செய்து விட்டேன். மேலும் நான் அறிமுகமான புதிதிலேயே தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என்று நடித்துக்கொண்டு வந்தேன்.
இன்னும் சொல்ல போனால் அந்த நேரத்தில் என்னுடைய பேட்டிகளை கவனித்து பார்த்தால் ஃபேன் இந்தியா என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தி இருப்பதை நீங்கள் நன்றாக பார்க்கலாம் . இதனால் என்னை மாற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று கூறியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்…