May 6, 2024

சொந்த ஊரில் தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட விஜயகுமார் ..!! இப்படியொரு சென்டிமென்ட்டா ..?? காரணத்தை கேட்டு ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

70 களில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் தான் விஜயகுமார் . கடந்த 1961 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ வள்ளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயகுமார் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டு வந்தார் . பின்னர் ஒரு கட்டத்தில் வயதான பிறகு தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி பல மொழி படங்களில் நடித்து வந்த விஜயகுமார் இதுவரை 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் . இதனிடையே இரண்டு திருமணம்,

செய்து கொண்ட விஜயகுமாருக்கு நான்கு மகள்கள்,  ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டு மகள்களை தவிர மீதியுள்ள அனைவரும் சினிமாவில் தான் உள்ளார்கள் . இப்படி இருக்கும்  நிலையில் சொந்த ஊரில் இருக்கும் தன்னுடைய வீட்டில் தனக்குத்தானே சிலை வைத்திருக்கிறாராம் ,

நடிகர் விஜயகுமார்.  அந்த வகையில் தன்னுடைய வீட்டின் முன்பு இரண்டு மனைவிகளுடன் இருக்கும் சிலையை வைத்திருக்கிறார் விஜயகுமார்.  அதோடு அவருடைய அப்பா , அம்மாவுக்கும் சிலை வைத்திருக்கிறாராம் நடிகர்  விஜயகுமார் . மேலும் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ,

ரிலீஸின்  போதும் தன்னுடைய தாத்தா பாட்டியின் சிலைக்கு முன்பு வணங்கிவிட்டு தான் செல்வாராம் நடிகர்   அருண் விஜய் . இதை பல வருடமாகவே ஒரு செண்டிமெண்டாக செய்து வருகிறாராம் நடிகர் அருண் விஜய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *