அபிராமி வெங்கடாசலம் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை அபிராமி . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2109 ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் தான்.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி, வான் மூன்று, விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள துருவ நட்சத்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் அபிராமி . அது மட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக,
கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமியிடம் , தொகுப்பாளர் நீங்கள் யாரைப் பார்த்து இது மாதிரி உடைகளை அணிகிறீர்கள் ,
என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பதிலளித்த பிக் பாஸ் அபிராமி , நான் யாரைப் பார்த்தும் அந்த மாதிரி செய்யவில்லை . எனக்கு பிடித்த ஆடைகளை மட்டுமே நான் போடுகிறேன். அதை பார்க்கிறவங்க பார்க்கட்டும், பார்க்காதவர்கள் போகட்டும் என்பதுதான் ,
என்னுடைய கொள்கை என்று கூறி இருந்தார் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…