April 27, 2024

உன்னுடன் இருக்கும்போது தான் நிம்மதியாக உணர்கிறேன்..!! காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த பிரியா பவானி சங்கர் ..!!

பிரியா பவானி சங்கர் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகை ஆவார். ஆரம்பத்தில் சீரியல் நடிகையாக கலக்கிக்கொண்டு வந்த பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் ,மான்ஸ்டர் ,

மாஃபியா ,களத்தில் சந்திப்போம் ,ஓ மணப்பெண்ணே, யானை ,திருச்சிற்றம்பலம் ,அகிலன் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார் . ஆனால் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  அப்படி இருந்தும் கூட ,

தற்போது தமிழில் மூன்று படம் தெலுங்கில் இரண்டு திரைப்படம் கைவசம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர் . மேலும் பிரியா பவானி சங்கர் நடிக்க வருவதற்கு முன்பே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் ஆசை காதலனின் ,

பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய புகைப்படங்களை பகிர்ந்து உன்னுடன் இருக்கும்போது தான் நிம்மதியாக உணர்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் எப்ப கல்யாணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *