ராகவா லாரன்ஸ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர் மற்றும் நடன கலைஞர் ஆவார். ஆரம்பத்தில் பைட் மாஸ்டருக்கு உதவியாளராக இருந்து வந்த ராகவா லாரன்ஸ் ஒரு கட்டத்தில் குரூப் டான்ஸராக மாறினார். இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்த ராகவா லாரன்ஸ் பின்னர் நடிகராகவும் , இயக்குனராகவும் கலக்கிக்கொண்டு வருகிறார் . இன்னும் சொல்லப்போனால் இவருடைய,
தனித்துவமான நடனத்திற்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது . மேலும் ராகவா லாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அப்படி தான் சம்பாதிப்பதில் பாதி பணத்தை இல்லாதவர்களுக்கு செலவழித்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.
அது மட்டுமல்லாமல் இலவச அறக்கட்டளை ஒன்றையும் பல வருடமாக நடத்திக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா 2 திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய,
ராகவா லாரன்ஸ் , சமீபத்தில் ரசிகர் ஒருவர் திருமண பத்திரிகை கொடுக்க வந்திருந்தார். எங்கே கல்யாணம் என்று கேட்டபோது மண்டபத்தில் வைத்து நடத்துவதற்கு பணம் இல்லை, அதனால் கோவிலில் தான் திருமணம் என்று கூறியிருக்கிறார் .இதனால் ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்காகவே ,
ஒரு திருமண மண்டபம் கட்ட முடிவு எடுத்துவிட்டாராம் . அந்த அந்த திருமண மண்டபத்திற்கு தன்னுடைய தாயின் பெயரை வைக்க உள்ளாராம். இந்த மண்டபத்தில் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்று அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதை பார்த்து ரசிகர்கள் இவரின் மனசு யாருக்கும் வராது என்று கூறி வருகின்றனர் …