April 25, 2024

மகளின் உடலை பார்த்து இடிந்துபோன இளையராஜா ..!! நேரில் சென்று ஆறுதல் சொல்லும் திரைப்பிரபலங்கள் ..!!

பவதாரணி ஓர் பிரபலமான தமிழ் சினிமா பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஆவார் . இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளான பவதாரணி தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் . குறிப்பாக இவர் குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும் இவருடைய குரலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் .

அந்த அளவிற்கு பவதாரணியின் குரல் ஒரு இனிமையான குரல் ஆகும் . இப்படி பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருந்த பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் . இதனால்  இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார் . இப்படி இருந்த நிலையில் நேற்று முன்தினம்,

சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் பவதாரணி . இவருடைய திடீர் மரணம் பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இந்நிலையில் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான,

பண்ணையபுரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது . தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு , இளையராஜாவுக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *