தமிழ் சினிமா உலகில் ஹீரோ ,வில்லன், குணச்சித்திர நடிகர் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி . ஆனால் அண்மைக்காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மண்ணை கவ்வி வருகிறது . இதனால் இனிமேல் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் விஜய் சேதுபதி .
இப்படி இருக்கும் நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித்தை வைத்து படம் எடுக்க இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் . இந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
ஆனால் விஜய் சேதுபதி 100 கோடி கொடுத்தாலும் சரி ,இனிமேல் வில்லன், சிறப்பு கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் . இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் எஸ் ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது…