தமிழ் சினிமா உலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் முந்தானை முடிச்சு. இந்த படத்தில் பாக்யராஜுடன் இணைந்து ஊர்வசி, தீபா ,கே கே சௌந்தர், நளினி காந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் அந்த காலத்திலேயே ,
வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்தது . குறிப்பாக இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்களை யாராலும் மறந்திருக்க முடியாது . அந்த அளவிற்கு தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பால் அசத்தி இருப்பார்கள் . அப்படி அந்தப் படத்தில் பள்ளிக்கு தாமதமாக வரும் காட்சியில் நடித்திருந்த மாணவன் தான் சுரேஷ் .
அவருக்கே தற்போது கல்யாணமாகி ஒரு மகன் இருக்கிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி 40 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் பாக்யராஜை சந்தித்திருக்கிறார் சுரேஷ். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…