கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கொரோனா வந்ததால் தான் இறந்தார் என்றும் , மூச்சு விட சிரமம் ஏற்பட்டதால் தான் இறந்தார் என்று பலரும் கூறி வருகின்றனர் .ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு பல வேதனைகளை அனுபவித்திருக்கிறார். அந்த வகையில் சினிமாவிற்காகவும் , அரசியலுக்காகவும் நிற்காமல் ஓடிய விஜயகாந்த் அவருடைய உடல் நிலையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை,
என்றுதான் பலரும் கூறி வருகின்றனர் . அப்படி கடந்த வருடம் அவருடைய ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று சொல்லி அவருடைய காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட்டதாம். இதுகுறித்து பிரேமலதா கூட விளக்கம் கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் தினமும் ஊசி,
மருந்து மாத்திரை என்று இறப்பதற்கு முன்பு பல கொடுமைகளை அனுபவித்திருக்கிறார் விஜயகாந்த் . இதைப் பார்த்த ரசிகர்கள் ஊருக்கே அள்ளிக்கொடுத்தவருக்கு இப்படியா நடக்கணும் என்று சோகத்தில் கூறி வருகின்றனர்…