April 29, 2024

விவேக் போட்ட விதை ..!! அவர் இறந்த பிறகும் செயல்படுத்தி வரும் செல் முருகன் ..!! நண்பன்னா இப்படி இருக்கணும் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் மறைந்த நடிகர் விவேக் அவர்கள் .  மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை தன்னுடைய காமெடி காட்சிகள் மூலம் விழிப்புணர்வு செய்து வந்தார் நடிகர் விவேக் . இதனாலேயே ஜனங்களின் கலைஞன் என்று அழைக்கப்பட்டார் நடிகர் விவேக் . அது மட்டுமல்லாமல் அப்துல்கலாம் சொன்னார் என்ற,

ஒரே காரணத்திற்காக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து வந்தார் விவேக்.  ஆனால் திடீரென அவர் இறந்து விட்டார்.  இவருடைய இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் விவேக் உடன் நடித்து வந்தவர் தான் ,

நடிகர் செல் முருகன்.  விவேக் நடித்த பாதி படங்களில் இவர் கண்டிப்பாக இடம் பெறுவார் . அதுமட்டுமல்லாமல் விவேக்குக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருந்து வந்தார் நடிகர் செல் முருகன்.  இந்நிலையில் விவேக் இறந்த பிறகு அவர் செய்த அதே பணியை தொடர்ந்து ,

வருகிறாராம் நடிகர்  செல் முருகன் . அந்த வகையில் இவரும் தற்போது பல மரக்கன்றுகளை நெட்டு வைத்து வருகிறார் . அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *