தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களின் ஒருவர்தான் நடிகர் அஜித்குமார் . அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜித் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . பின்னர் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்ட அஜித்துக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . ஆனால் ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன்பே ,
அந்த நடிகையை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இருந்திருக்கிறார் நடிகர் அஜித். அவர் வேறு யாரும் இல்லை நடிகை சுவாதி தான். கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தேவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான்,
நடிகை சுவாதி. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வசந்த வாசல், செல்வா, சுந்தரபாண்டியன் ,துள்ளித் திரிந்த காலம் ,ஹவுஸ் ஃபுல், சொக்கத்தங்கம் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சுவாதி. இதனிடையே அஜித்துடன் இணைந்து வான்மதி,
உன்னை தேடி போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை சுவாதி. அப்போது நடிகை சுவாதி மீது காதல் வயப்பட்டார் நடிகர் அஜித் . பின்னர் கட்டுனா இவரைத்தான் கட்ட வேண்டும் என்று சுவாதியின் அம்மாவிடம் பெண் கேட்டு சென்று இருக்கிறார் நடிகர் அஜித் .
ஆனால் அவர்கள் பெண் தர மறுத்து விட்டார்களாம் . இதன் பிறகு தான் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டாராம் நடிகர் அஜித். மேலும் நடிகை சுவாதிக்கும் தற்போது திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது …