April 29, 2024

ஜோதிகாவுடன் நடித்து சூர்யாவை வெறுப்பேற்றிய விக்ரம் ..!! கல்யாணத்துக்கு கூட கூப்பிடாத சூர்யா ..!! இவருக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை ..??

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சில நடிகர்களுக்கிடையே போட்டிகள் நிலவி வரும் . அப்படி எம்ஜிஆர்- சிவாஜி தொடங்கி இப்போது இருக்கும் சிவகார்த்திகேயன்- விஜய் சேதுபதி வரை பல நடிகர்கள் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்து வந்தனர். அந்த வரிசையில் ஒருவர்கள் தான் விக்ரம் – சூர்யா . இந்த இரண்டு நடிகர்களுக்குமே மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது,

இயக்குனர் பாலா தான் . இதன் பிறகு பிதாமகன் படத்தில் விக்ரமும் , சூர்யாவும் ஒன்றாக நடித்திருந்தனர் . இந்த திரைப்படம் இருவருக்குமே நல்ல வரவேற்பை பெற்று தந்தது . ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சூர்யாவின் ஒரு சில காட்சிகளை நீக்கிவிடுமாறு ,

இயக்குனர் பாலாவிடம் கேட்டிருக்கிறார் இயக்குனர் விக்ரம்.  பின்னர் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சூர்யா அப்போதிலிருந்து விக்ரமிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம் . அது மட்டுமல்லாமல் அப்போது சூர்யாவை வெறுப்பேற்றுவதற்காக தொடர்ந்து ஜோதிகாவை ,

தன்னுடைய படங்களில் விக்ரம் நடிக்க வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.  அந்த வகையில் விக்ரமும் , ஜோதிகாவும் இணைந்து தூள், அருள் போன்ற படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இதன் பிறகு தான் விக்ரம் , சூர்யா இருவருக்கும் இடையே ,

பெரிய அளவில் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த காரணத்தினால் தன்னுடைய திருமணத்திற்கு கூட விக்ரமுக்கு சூர்யா அழைப்பு கொடுக்கவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *