April 25, 2024

சுந் தர் சி , ராக வா லார ன்ஸு க்கே பயத் தை கா ட்ட வரு ம் பேய் பட இய க்குன ர் ..!! எத் தன நா ளாச் சு இவரி ன் படத் தை பார் த்து ..!! 14 வருட ம் கழித் து களமி றங்கி ய இய க்குன ர் ..!!

தமிழ் சினிமா உலகை பொறுத்தவரை பேய் படம் என்றாலே அது சுந்தர் சி மற்றும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தான்.  அப்படி அரண்மனை என்ற ஒரு சூப்பர் ஹிட் பேய் படத்தை இயக்கிய சுந்தர் சி தொடர்ந்து அரைத்த மாவையே அரைத்து அரண்மனை 2 ,அரண்மனை 3 தற்போது அரண்மனை 4  என்று வரை இயக்கி வருகிறார்.  இவரைத் தொடர்ந்து ,

நடிகர் ராகவா லாரன்ஸ் முனி என்ற பேய் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவரும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்கும் விதமாக காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என்று இயக்கியிருந்தார் . இப்படி அரைத்த மாவையே ,

அரைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் அவர்களையே பயப்பட வைக்க களத்தில் இறங்கியுள்ளார் இன்னொரு பேய் பட இயக்குனர்.  அவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் அறிவழகன் தான்.  கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் என்ற படத்தின் மூலம்,

இயக்குனர் அவதாரம் எடுத்த அறிவழகன் தன்னுடைய முதல் படத்திலேயே தண்ணீரை வைத்து பயத்தை காட்டியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 14 வருடம் கழித்து மீண்டும் பேய் படம் ஒன்றை இயக்கி வருகிறார் இயக்குனர் அறிவழகன்.  அந்த வகையில் ஆதி,

லட்சுமிமேனன், சிம்ரன் , லைலா என்ற பல பிரபலங்கள் நடித்து வரும் திரைப்படம் தான் சப்தம்.  இந்தத் திரைப்படத்தை  சப்தத்தை பேயாக வைத்து எடுத்திருக்கிறார்களாம்.  இதனால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *