விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதை அடுத்து ஏழாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது . இந்த சீசனின் சினிமா பிரபலங்கள் உட்பட பல பேர் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸுக்கு மட்டும் போக மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம் பிரபல நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை ரேகா நாயர் தான் . பூவே உனக்காக , நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரேகா நாயர்,
பார்த்திபன் நடிப்பில் வெளியான இரவின் நிழல் படத்திலும் நடித்திருந்தார் . இந்நிலையில் பிக் பாஸ் செவன் அறிவிப்பு வெளியானதில் இருந்தே நடிகை ரேகா நாயரும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ,
பேசிய நடிகை ரேகா நாயர் கூறியதாவது , பிக் பாஸ் வீட்டுக்கு நான் ஏன் போக வேண்டும் . என்னை நடுக்காட்டில் தனியாக தங்க சொன்னாலும் எத்தனை நாள் வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு மட்டும் போக மாட்டேன். அது மட்டுமில்லாமல் கடந்த ,
மூன்று சீசன்களாகவே நான் இதில் கலந்து கொள்ள போகிறேன் என்று கூறி வருகிறார்கள். அப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்களுக்கு இருப்பதற்கு பேசமா 100 மரங்களை நட்டு வைக்கலாம் என்று கூறியிருந்தார் நடிகை ரேகா நாயர்…