May 3, 2024

மாசம் ஒரு லட்சம் சம்பளம் ..!! சூதாட்டத்தால் எல்லாம் போச்சு ..!! அப்பாவால் நடுத்தெருவுக்கு வந்த பிரபல நடிகை ..!!

நீலிமா ராணி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். கடந்த 1992 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நீலிமா ராணி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாண்டவர் பூமி ,ஆல்பம், விரும்புகிறேன் போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கொஞ்சம் வளர்ந்ததும் திரைப்படங்களில்,

துணை நடிகையாக நடித்திருந்தார் நடிகை நீலிமா ராணி.  இப்படி வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வந்த நீலிமா ராணி சின்னத்திரையில் ஒளிப்பரப்பான மெட்டி ஒலி ,கோலங்கள் ,அத்திப்பூக்கள், செல்லமே, தென்றல் ,அரண்மனை கிளி போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நீலிமாராணிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை கூறியிருந்தார்  நடிகை நீலிமா ராணி.  அந்த வகையில் அப்போது,

சீரியல்களில் நடித்து வந்த போது மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்தாராம்.  அந்த பணத்தை எல்லாம் அவருடைய அப்பாவிடம் கொடுத்து இருக்கிறார் நீலிமாராணி . ஆனால் அவருடைய அப்பா அந்த பணத்தை சூதாட்டத்தில் வைத்து எல்லா பணத்தையும் இழந்துவிட்டாராம்.

ஒரு கட்டத்தில் கையில் சுத்தமாக காசு இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்து விட்டாராம் நடிகை நீலிமா ராணி . இதன் பிறகு வாடகை வீட்டில் குடியேறி கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து வாடகைக்கு இருந்த வீட்டையே வாங்கினாராம் நடிகை நீலிமா ராணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *