April 26, 2024

அப்பா வீட்டிலையும் இப்படி தான் இருப்பார் ..!! மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் ..!! வெளிப்படையாக சொல்லிய கார்த்திக் ராஜா ..!!

இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் தான் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா . ஆரம்பத்தில் இளையராஜா இசையமைத்த படங்களுக்கு பின்னணி இசை கொடுத்து வந்தார் கார்த்திக் ராஜா . இதன்பிறகு இசையமைப்பாளராக அறிமுகமான கார்த்திக் ராஜா தமிழில் வெளியான உல்லாசம், காதலா காதலா, டும் டும் டும் ,உள்ளம் கொள்ளை போகுதே, நெறஞ்சா மனசு , மெர்குரி பூக்கள்  போன்ற பல படங்களில்,

இடம் பெற்ற பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா . இவர் திறமையான இசையமைப்பாளராக இருந்தும் இவருக்கென்று ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் வருத்தமான விஷயமே . இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில்,

கலந்து கொண்ட கார்த்திக் ராஜாவிடம் நீங்கள் அப்பா பிள்ளையா .? இல்லை அம்மா பிள்ளையா .? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு பதிலளித்த கார்த்திக் ராஜா, நான் அம்மா பிள்ளை தான் , எனக்கு அப்பா மீது ஒரு தனி மரியாதை இருக்கிறது . அப்பா வீட்லையும் ,

ஒரு லெஜன்ட் தான்.  ஆனால் மற்ற குடும்பம் மாதிரி எங்கள் வீட்டில் கிடையாது . ரொம்ப கண்டிப்புடன் தான் இருப்பார் . இப்போது கூட வீட்டில சண்டை போட்டு தான் இருக்கு . அப்பா கிட்ட ஏதாவது பாட்டை போட்டு காட்டினால் ச்சீ தூனு  சொல்லுவாரு .  அப்ப எனக்கு ,

ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும் . இதனால் அப்பாவிடம் இசையை பற்றி பேசுவதில்லை என்று கூறியிருந்தார் கார்த்திக் ராஜா. இதைப்பார்த்த ரசிகர்கள் இளையராஜா வீட்டிலையும் இப்படி தான் நடந்துகொள்வாரா என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *