தமிழ் சினிமா உலகில் கடந்த 1998 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதல் மன்னன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மானு. இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் நடிகை மானு . பின்னர் பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு,
தமிழில் வெளியான என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார் . மேலும் இவர் மொத்தமாகவே இரண்டு படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார் . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது நடிகை மானு கூறியதாவது , நான் அசாம் மாநிலத்தின்,
முதல் அமைச்சரின் பேத்தி நான். சென்னைக்கு படிக்கத் தான் வந்தேன் , அப்படி நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே காதல் மன்னன் படத்தில் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். குறிப்பாக விவேக் மற்றும் இயக்குனர் சரண் இருவரும் தான்,
என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள் என்று கூறியிருந்தார் நடிகை மானு . இப்படி இருக்கும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…