சமீப காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து தான் பெரிய அளவில் நிலவி வருகிறது. அதில் விஜயின் பெயர்தான் அடிக்கடி அடிபட்டு வருகிறது. இதை பார்த்த பலரும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான் விஜய் அவருடைய கால் தூசிக்கு கூட வரமாட்டார் என்று தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் , ரஜினி ரசிகர்களுக்கும் ,
பெரிய மனசங்கட்டம் வந்தது . இப்படி ரஜினி பெருசா இல்ல விஜய் பெருசா என்று பஞ்சாயத்து ஓடி வரும் நிலையில் அந்த விஷயத்தில் எப்போதுமே ரஜினியால் விஜய்யை முந்த முடியாது என்று கூறப்படுகிறது . அந்த வகையில் நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளிலும்,
பெரிய அளவில் வரவேற்பு உள்ளதாம் . இன்னும் சொல்லப்போனால் சிங்கப்பூர் , மலேசியா போன்ற நாடுகளில் சூப்பர் ஸ்டாரின் படத்தை விட விஜய் நடித்த படங்கள் தான் அதிக வசூல் செய்கிறதாம் . அதுமட்டுமில்லாமல் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் வெளிநாடுகளில் 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம் . ஆனால் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வெறும் 28 கோடிக்கு தான் வெளிநாடுகளில்,
விற்பனை செய்யப்பட்டுள்ளதாம் . இதனால் வெளிநாடுகளை பொறுத்தவரை விஜய் தான் டாப் லிஸ்டில் இருக்கிறார் என்றும் இதனால் என்னதான் உருண்டாலும், பிரண்டாலும் ரஜினியால் விஜய்யை எந்த காலத்திலும் முந்த முடியாது என்றும் கூறப்படுகிறது…