தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகள் தான் கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் . இருவருக்குமே தற்போது தமிழ் ,மலையாளம், தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. குறிப்பாக சிறுவயதிலிருந்தே இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர்.
அதோடு இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் இவர்கள் இருவருமே சிவகார்த்திகேயன் படத்தின் மூலம்தான் நடிகையாக அறிமுகமானார்கள் . தற்போது கீர்த்தி சுரேஷ் கைவசம் ஐந்து திரைப்படங்களை வைத்திருக்கிறார்.
அதே போல கல்யாணி பிரியதர்ஷனும் நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம் …