கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் சென்னையையே சூறையாடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் . கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு இப்படி ஒரு வெள்ளத்தில் சென்னை மக்கள் சிக்கி அவதிப்பட்டனர். குறிப்பாக அத்தியாவசிய தேவைக்காகவே சென்னை மக்கள் போராடி வந்தார்கள் . மேலும் இந்த நேரத்தில் பல பிரபலங்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வந்தனர் .
அப்படி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகரான அமீர்கான் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டனர் . அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்பு குழு மூலம் மீட்டு இருந்தார் நடிகர் அஜித் .அது மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தையும் பத்திரமாக மீட்டு இருந்தார்கள்.
அதோடு அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்திருந்தார் நடிகர் அஜித் . இப்படி இருக்கும் நிலையில் விஷ்ணு விஷால் இது குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார் . இதைப் பார்த்து கடுப்பான நடிகர் போஸ் வெங்கட் தன்னுடைய சமூக வலை தல பக்கத்தில் கூறியதாவது,
வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு …இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்…( உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பு இல்லை..,
வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்….
(உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்) pic.twitter.com/klDj5wNixx— Bose Venkat (@DirectorBose) December 6, 2023
( ஒரு போர்ட் அவனுக்கும் விட்டிருக்களாம் என்று கூறியிருந்தார் நடிகர் போஸ் வெங்கட் . தற்போது அஜித்துக்கு எதிராக இவர் போட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…