எஸ் ஜே சூர்யா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய வந்த எஸ் ஜே சூர்யா கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் இயக்குவதை நிறுத்திய எஸ் ஜே சூர்யா முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் . அப்படி ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்த எஸ் ஜே சூர்யா தற்போது வில்லனாக கொடி கட்டி பறந்து வருகிறார் . அதுவும் அண்மைக்காலமாக இவர் இல்லாத,
படங்களை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி சமீபத்தில் வெளியான மாநாடு , டான் , வாரிசு , மார்க் ஆண்டனி , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகர் எஸ் ஜே சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் 55 வயதாகியும் கூட ,
இன்னும் திருமணம் செய்து கொள்ளாத எஸ் ஜே சூர்யா இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடியதாக கூறியுள்ளார் . அந்த வகையில் செய்தியாளர்களிடம் பேசியே எஸ் ஜே சூர்யாவிடம் அடுத்த ஆண்டிலாவது தல தீபாவளியை கொண்டாடுவீர்களா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த எஸ் ஜே சூர்யா , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தான் என்னுடைய பொண்டாட்டி. அப்படி பார்த்தால் இந்த வருட தீபாவளி தான் எனக்கு தல தீபாவளி என்று கூறியிருந்தார்…