கே பி ஒய் பாலா ஒரு பிரபலமான விஜய் டிவி பிரபலம் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் பாலா. இதன்பிறகு குக் வித் கோமாளி, காமெடி ராஜா கலக்கல் ராணி, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் பாலா.
இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த பாலாவுக்கு வெள்ளித்திரையில் நடிக்கவும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் தமிழில் வெளியான ஜூங்கா, புலிகுத்தி பாண்டி ,பிரண்ட்ஷிப் ,நாய் சேகர் ,கோஷ்டி , ரன் பேபி ரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .
மேலும் இவர் சமீப காலமாக செய்யும் உதவிகள் ரசிகர்களை நெகிழ வைத்து வருகிறது. அப்படி அண்மையில் மலைவாழ் மக்களுக்காக மூன்று ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்திருந்தார் பாலா . இப்படி இருக்கும் நிலையில் ,
தற்போது புயலால் சென்னையே அத்தியாவசிய தேவைகளுக்காக தவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் களத்தில் இறங்கி இருக்கிறார் பாலா . அந்த வகையில் தன்னிடம் இருந்த இரண்டு லட்சம் ரூபாயை 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்திருக்கிறார் பாலா.
தற்போது அந்த வீடியோ இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ரஜினி, விஜய் எல்லாம் இவரைப் பார்த்து கத்துக்கணும் என்று கூறி வருகின்றனர்…