April 27, 2024

யாராவது உதவி பண்ணுங்க ..!! வீட்டின் உச்சியில் இருந்து உதவி கேட்ட நடிகர் ..!! 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட மீட்புக் குழு..!!

தற்போது சென்னையே வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்படி ஒரு இயற்கை சீற்றம் சென்னையில் நடந்துள்ளது.  இதனால் சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் . மேலும் மக்களுக்காக தமிழக அரசும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

அப்படி வீடு முழுவதும் தண்ணீர் புகுந்ததால் வீட்டின் கூரை மேல் நின்று யாராவது உதவி பண்ணுங்க என்று உதவி கேட்டிருந்தார் நடிகர் விஷ்ணு விஷால் . அப்படி அவர் உதவி கேட்ட நாலு மணி நேரத்தில்  அவருடைய குடும்பத்தை பத்திரமாக மீட்டுள்ளது மீட்புக் குழு.

மேலும் நடிகர்  விஷ்ணு விஷால் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகரான அமீர்கானையும் பத்திரமாக மீட்டுள்ளனர் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்து இருந்தார் நடிகர் விஷ்ணு விஷால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *