May 7, 2024

வயிற்று வலின்னு சொன்னது ஒரு குத்தமா ..?? பாலா கேட்ட கேள்வியால் ..!! வணங்கான் படத்தில் இருந்தே விலகிய சூர்யா ..!!

பாலா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாலா சேது என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல தரமான திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் பாலா . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல நடிகர்களுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறார் பாலா.

அந்த வகையில் சூர்யாவுக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது பாலா தான் . அந்த வகையில் சூர்யா பாலா கூட்டணியில் வெளியான நந்தா , பிதாமகன் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . இதை அடுத்து மூன்றாவது முறையாக,

இருவரும் வணங்கான் என்ற படத்தில் இணைந்திருந்தனர் . இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது . குறிப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் திடீரென சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது .

இதன்பிறகு இந்த படத்தில் அருண் விஜய் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் சூர்யா விலகியதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யாவை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டே இருந்தாராம் பாலா.

இதுவும் ஒரு பிரச்சனை என்று கூறப்படுகிறது.  அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பின் போது சூர்யா தனக்கு வயிற்று வலி என்று கூறினாராம் .அதற்கு பாலா ஏன் பீரியட்ஸா என்று கேட்டாராம் .இந்த ஒரு காரணத்தினால் தான் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்தாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *