யாஷிகா ஆனந்த் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இளம் நடிகை ஆவார். ஆரம்பத்தில் மாடலாக இருந்து வந்த யாஷிகா கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தான் .
பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து நோட்டா ,மூக்குத்தி அம்மன், ஜாம்பி , தி லெஜன்ட் , கடமையை செய் , பஹீரா , சில நொடிகளில் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த் . அது மட்டுமில்லாமல் தற்போது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் ,
கைவசம் வைத்து இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார் . இந்நிலையில் சமீபத்திய,
பேட்டி ஒன்றில் கலந்து கொண்டா நடிகை யாஷிகா ஆனந்திடம் உங்களைவிட வயதில் குறைந்த நபருடன் டேட் பண்ணியது உண்டா என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார் . அதற்கு பதில் அளித்த நடிகை யாஷிகா ஆனந்த் கூறியதாவது , ஆம், நான் டேட்டிங் ,
செய்து இருக்கிறேன். நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையனுடன் டேட்டிங் செய்தேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்…