திரிஷா ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகை ஆவார். ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார் நடிகை திரிஷா.
இப்படி முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு வந்த நடிகை திரிஷாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது . இதன் பிறகு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவரை புகழை உச்சிக்கே கொண்டு சென்றது என்று தான் சொல்ல வேண்டும் .
இதை அடுத்து தற்போது விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி ,கமல்ஹாசனின் புதிய படம் என்று ஆறு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை திரிஷா. இப்படி இருக்கும் நிலையில் 40 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தும் திருமணம் பாதியிலேயே நின்று விட்டது. இந்நிலையில் தற்போது கோடீஸ்வர மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள உள்ளாராம் நடிகை திரிஷா. அவர் வேறு யாருமில்லை மலையாள திரை உலகில்,
இருந்து வரும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தான். அவரை தான் நடிகை திரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் விரைவில் தன்னுடைய திருமணம் குறித்து திரிஷா அறிவிப்பார் என்று கூறப்படுகிறது…