April 26, 2024

பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் வீட்டில் நடந்த விசேஷம் ..!! ஒன்று கூடிய சொந்தங்கள் ..!! என்ன விசேஷம் தெரியுமா ..??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர் . இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார் . இரண்டாவது மகளான சௌந்தர்யா ஒரு கிராபிக் டிசைனர் மற்றும் இயக்குனர் ஆவார்.  இவர்  கடந்த 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதனிடையே அஸ்வின் என்பவரை,

கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்த சௌந்தர்யா கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது . அந்த  குழந்தைக்கு தன்னுடைய அப்பாவின் பெயரை சேர்த்து வீர் ரஜினிகாந்த் என்று வைத்திருந்தார் .மேலும் கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஸ்டாரின் வீட்டில் எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியும் நடக்கவில்லை. 

இப்படி இருக்கும் நிலையில் சௌந்தர்யாவின் மகனுக்கு காது குத்து விழா நடைபெற்று இருக்கிறது . அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் குடும்ப உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *