திரிஷா ஓர் தமிழ் திரைப்பட முன்னணி நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சாமி ,லேசா லேசா ,எனக்கு 20 உனக்கு 18 ,கில்லி ,திருப்பாச்சி ,ஆறு, கிரீடம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் ,
நடிகை திரிஷா . மேலும் நடிகை திரிஷா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 40 வயதாகியும் கூட ரசிகர்களை தன்னுடைய அழகால் மயக்கி வருகிறார் நடிகை திரிஷா.
இடையில் மார்க்கெட் இல்லாமல் இருந்து வந்த திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய அளவில் கை கொடுத்தது . இதை அடுத்து தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை திரிஷா . இப்படி இருக்கும் நிலையில் நடிகை திரிஷா,
இதுவரை சேர்த்து வைத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது .அந்த வகையில் ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு 83 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது . குறிப்பாக கல்யாணம் ஆவதற்கு ,
முன்பே இத்தனை கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் நடிகை திரிஷா . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப வரப்போற கணவர் கொடுத்து வைத்தவர் என்று கூறி வருகின்றனர்…