பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. மேலும் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப்பை அதிரடியாக வெளியேற்றினார் கமல்ஹாசன். காரணம் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டது . இந்த ஒரு காரணத்திற்காக ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றினார் கமல்ஹாசன் . ஆனால் கமலுடைய தீர்ப்பு தவறான தீர்ப்பு என்று ரசிகர்கள் பலரும்,
கொந்தளித்தனர் . குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகளால் தான் பிரதீப் வெளியே சென்றார் என்று தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் நாளுக்கு நாள் பிரதீப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் , அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ,
அழைப்பதற்கு முடிவெடுத்து உள்ளார்களாம் . இந்த நேரத்தில் முக்கிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் பிரதீப் . அந்த வகையில் பிரதீப் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது , நீங்கள் என்னை மீண்டும் உள்ளே அனுப்புவதற்கு முடிவு எடுத்தால் ,
எனக்கு எதிராக செயல்பட்ட இரண்டு பேரை வெளியேற்றுவதற்கு என்னிடம் இரண்டு ரெட் காடுகள் கொடுக்க வேண்டும் . அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டின் ஏழாவது வார கேப்டன் ஆகும் பொறுப்பையும் எனக்கு கொடுக்க வேண்டும் இன்று பதிவிட்டு ,
ரொம்ப ஷார்ப்பான புள்ளிங்கலால தான் அது முடியும் என்று கூறியுள்ளார் பிரதீப் . இதனால் பிக் பாஸ் இதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்…