தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வந்தவர் தான் விஜயகாந்த் அவர்கள். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். காரணம் , அந்த அளவிற்கு தன்னைவிட மற்றவர்களின் விஷயத்தில் தான் அதிக கவனம் செலுத்துவாராம் விஜயகாந்த் .
குறிப்பாக சாப்பாடு விஷயத்திலும் தனக்கு கொடுக்கப்படும் உணவுதான் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று சரிசமமாக அனைவரையும் நடத்தினார். இப்படி விஜயகாந்திடம் இருக்கக்கூடிய எல்லா தகுதியும் இன்னொரு நடிகரிடம் இருக்கிறதாம். அவர்தான் நடிகர் விஜய் ஆண்டனி . அந்த வகையில்,
இவரைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் டி சிவா கூறியதாவது , அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனியை வைத்து அக்னி சிறகுகள் என்ற படத்தை தயாரித்திருக்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி நடந்து கொண்டது எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது . அவர் முன்கூட்டியே ஹரவன் வேண்டாம் ,
என்று சொல்லிவிட்டார். அது மட்டுமல்லாமல் தனக்காக எதையும் ஸ்பெஷலாக செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்தே தான் உணவுகளை கொண்டு வந்து சாப்பிட்டார். இன்னும் சொல்ல போனால் படப்பிடிப்பிற்கு எல்லோருக்கும் முன்பே வந்துவிடுவார். பின்னர் எல்லோரையும் அனுப்பிவிட்டு தான் ,
வீட்டிற்கு திரும்புவார். அதோடு சமீபத்தில் பிச்சைக்காரர்களை அழைத்து பைவ் ஸ்டார் ஹோட்டலில் அவர்களுக்கு உணவு வழங்கி இருந்தார் . அந்த அளவிற்கு விஜயகாந்திடம் இருந்த எல்லா குணங்களும் விஜய் ஆண்டனியிடம் பார்க்க முடிகிறது என்று பெருமையாக கூறியிருந்தார் தயாரிப்பாளர் டி சிவா…