தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . இவர் இயக்குனரும் , நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர் – ஷோபா தம்பதியின் ஒரே மகன் ஆவார் . மேலும் நடிகர் விஜய்யின் அம்மாவான ஷோபா சந்திரசேகரும் ஒரு பிரபலம் தான் . அந்த வகையில் இவர் மாண்புமிகு மாணவன், தேவா ,ரசிகன் ,செந்தூரப்பாண்டி, எனக்கு நானே நீதிபதி,
நெஞ்சிருக்கும் வரை போன்ற பல திரைப்படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்து இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் நண்பர்கள் மற்றும் இன்னிசை மழை போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார் ஷோபா சந்திரசேகர் . அதோடு தமிழில் வெளியான நீதியின் மறுபக்கம்,
இன்னிசை மழை, ரசிகன், விஷ்ணு ,ஒன்ஸ்மோர் ,சிவகாசி ,நெஞ்சிருக்கும் வரை ,முதல் கனவே, வேட்டைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் இடம் பெற்ற பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியிருக்கிறார் ஷோபா சந்திரசேகர். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யும் ,
அவருடைய அம்மாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது என்று கூறிவருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…