தமிழ் சினிமா உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அட்டகத்தி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா. இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,
முண்டாசுப்பட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நந்திதா , இனிமேல் ஹாரர் படங்களை தேர்வு செய்து நடிக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார் . மேலும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் தொடர்ச்சியாக,
பேய் பட கதைகளே சொல்லி வருவதால் , அதிலிருந்து சற்று வெளியேறி நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார் நடிகை நந்திதா. அப்படி இவர் சமீபத்தில் வெளியான செவ்வாய்க்கிழமை என்ற பேய் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…