தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும் , இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் விஜய் ஆண்டனி . இப்படி தவிர்க்க முடியாத பிரபலமாக இருந்து வந்த விஜய் ஆண்டனி கடந்த 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இவர்களுக்கு லாரா மீரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . இதில் மூத்த மகளான மீரா கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.
இவருடைய திடீர் மரணம் விஜய் ஆண்டனி உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கும் அவருக்கு வயது பெறும் 16 தான் . இப்படி ஆசை ஆசையாக வளர்த்த மகளை பறிகொடுத்து விட்டோமே என்று மிகப்பெரிய கவலையில் இருந்து வந்தார் நடிகர் விஜய் ஆண்டனி .
பின்னர் மகள் இறப்பிற்கு பிறகு ஒரு உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டு இருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி . இதை பார்த்த ரசிகர்கள் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வந்தனர். இப்படி இருக்கும் நிலையில் மகள் இறந்து ஒரு வாரத்திலேயே மீண்டும் படப்பிடிப்பில் கலந்து,
கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டானாராம் விஜய் ஆண்டனி . தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு தயாராக இருக்கிறதாம். இதனால் யாரும் என்னால் நஷ்டத்தை சந்திக்கக் கூடாது,
என்ற ஒரே காரணத்திற்காக சோகத்தை எல்லாம் மறந்து தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் நடிகர் விஜய் ஆண்டனி . இதைப் பார்த்த ரசிகர்கள் இவருடைய மனசு யாருக்குமே வராது என்று கூறி வருகின்றனர் …