ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் செந்தில் . கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான ஒரு கையில் இரு தீபங்கள் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் செந்தில் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார் செந்தில் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் கவுண்டமணியுடன் இணைந்து ,
நடித்து வந்தார் செந்தில் . அப்படி கவுண்டமணி- செந்தில் கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இன்னும் சொல்லப்போனால் இவர்களுடைய காமெடிக்காக ஓடிய படங்களும் உண்டு . இதனால் தொடர்ந்து ,
இருவரும் நடித்துக்கொண்டு வந்தனர் . இப்படி தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்த செந்தில் ஒரு கட்டத்தில் நடிப்பதையே நிறுத்தினார் . பின்னர் பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த செந்தில் தற்போது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டு,
வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் 72 வயதில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்க உள்ளாராம் நடிகர் செந்தில். அந்த வகையில் காமெடியனாகவே தன்னுடைய முழு வாழ்க்கையை ஓட்டிய நடிகர் செந்தில் இயக்குனர் ராஜ் கண்ணாயிரம் என்பவர் இயக்கத்தில் உருவாகும்,
” வாங்கண்ணா வணக்கங்கண்ணா ” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம் . இதைப் பார்த்த ரசிகர்கள் செந்திலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…