தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் முன்னணி நடிகைகளாக கொடிகட்டி பறந்து வருகிறார்கள் நயன்தாரா மற்றும் திரிஷா போன்ற நடிகைகள் . குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே திரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. இடையில் கொஞ்சம் திரிஷா சரிக்கியதும் நயன்தாரா அப்படியே உச்சத்திற்கு சென்றார்.
பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார் . பின்னர் நயன்தாராவுக்கு திருமணமான பிறகு திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்திருந்தார். இதன் மூலம் இவருக்கு சுக்கிர திசை தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் ,
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வரும் திரிஷா அடுத்ததாக கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் . இதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கங்கராஜ் இயக்க உள்ள தலைவர் 17 1 படத்திலும் நடிக்க இருக்கிறாராம்
நடிகை திரிஷா . அது மட்டுமல்லாமல் ஹிந்தியில் சல்மான்கானுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் . இதனால் இவருடைய சம்பளம் 50 கோடிக்கு மேல் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் ,
நடிகையான நயன்தாராவே 10 கோடி தான் வாங்குகிறார் . அப்படி மட்டும் திரிஷா 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி விட்டால் நயன்தாரா எல்லாம் டம்மி ஆகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது…