May 4, 2024

விஜய்யின் ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜை நடத்திய எஸ் ஏ சி ..!! இந்த கோவிலுக்கு இப்படியொரு சக்தியா ..?? 2026 ல் கப்பு முக்கியம் பிகிலு ..!!

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அதற்கான வேலைகளை தன்னுடைய ரசிகர்களை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . அதுமட்டுமல்லாமல் லியோ படத்தின் வெற்றி விழாவில் அரசியலுக்கு வருவது குறித்து ” 2026 ல் கப்பு முக்கியம் பிகிலு ” என்று மறைமுகமாக கூறியிருந்தார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில்,

நடிகர் விஜய்யின் ஜாதகத்தை வைத்து சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் . அந்த வகையில் விஜய் இன்று இவ்வளவு உயரத்தில் இருப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்ததே எஸ் ஏ சந்திரசேகர் தான்.  அப்படி ஆரம்பத்தில் அப்பாவின் வழிகாட்டுதலின்படி,

நடந்து வந்த விஜய் சமீபக்காலமாக அவருடைய அப்பாவிடம் பேச்சுவார்த்தை இல்லை என்று தகவல் வெளியானது . இதை எஸ் ஏ சந்திரசேகரே  பல பேட்டிகளில் கூறியிருந்தார் . என்னதான் பேசிக் கொள்வதில்லை என்றாலும் விஜய் மகன் தானே என்று அவருக்காக சிறப்பு பூஜை நடத்தி,

இருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர் . அந்த வகையில் திருச்சியில் உள்ள ஸ்ரீ லிவனேஸ்வரர் கோயிலுக்கு சென்ற எஸ் ஏ சந்திரசேகர் விஜய் உட்பட குடும்பத்தினர் அனைவருடைய ஜாதகத்தையும் வைத்து சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் . இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால்,

திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்குமாம் .  இதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை விஜய்யின் விவாகரத்து சர்ச்சைக்காக எஸ் ஏ சந்திரசேகர் இப்படி செய்தாரா அல்லது அரசியல் வருகைக்காக இப்படி செய்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *