என்னதான் கேப்டன் விஜயகாந்த் நம்மையெல்லாம் விட்டு சென்றாலும் அவர் செய்த நல்ல விஷயங்கள் எல்லாம் இங்கே தான் இருக்கிறது. மேலும் இறக்கும் வரை மற்றவர்களுக்கு உதவும் வள்ளலாகவே இருந்திருக்கிறார் விஜயகாந்த். இதனாலையே இவருடைய இறப்பிற்கு கடல் அலை போல மக்கள் குவிந்தனர் . மேலும் கடந்த 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஜயகாந்த் .
திருமணமான இவர்களுக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆரம்பத்திலிருந்தே கேப்டனுக்கு ஒரு நல்ல துணைவியாகவும் , ஊக்கப்படுத்துவராகவும் இருந்து வருகிறார் பிரேமலதா. குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே பெரிய தலைவர்களுக்கு,
மதிப்பு கொடுக்கும் விஜயகாந்த் தன்னுடைய திருமணம் கலைஞர் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் அவர் கையால் தாலி எடுத்துக் கொடுக்கப்பட்டு விஜயகாந்த் பிரேமலதா திருமணம் நடைபெற்று உள்ளது . இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால்,
விஜயகாந்தின் திருமணம் ரசிகர்களின் முன்னிலையில் நடந்தது தான் . தற்போது விஜயகாந்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த அரிய புகைப்படங்களை நீங்களும் பாருங்க….