April 27, 2024

பிரச்சனை இன்னும் முடியல ..!! இனிமே தான் ஆரம்பம் ..!! திரிஷாவிடம் 1 கோடி கேட்ட மன்சூர் அலிகான் ..!! காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எதையாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் நடிகர் மன்சூர் அலிகான் . அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரிஷாவை பற்றி மிகவும் கொச்சையாக பேசி இருந்தார் நடிகர் மன்சூர் அலிகான் . இதனால் மன்சூர் அலிகான் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார் . இந்த நேரத்தில் நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் குரல் கொடுத்தனர்.

அதில் குஷ்பூ,  சிரஞ்சீவி போன்ற பிரபலங்களும் அடக்கம் . பின்னர் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி கொண்டே இருந்ததால் ஒரு வழியாக திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகர் மன்சூர் அலிகான்.  இதற்கு  நடிகை திரிஷாவும் ,

மன்னித்து விட்டதாக கூறியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் மீண்டும் அடுத்த பிரச்சனையை கிளப்பி இருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான் . அந்த வகையில் திரிஷா, குஷ்பூ,  சிரஞ்சீவி போன்ற மூன்று பிரபலங்கள் மீது மான நஷ்ட வழக்கு,

போட்டுள்ளாராம் நடிகர் மன்சூர் அலிகான் . இதனால் இவர்கள் மூன்று பேரும் தலா ஒரு கோடி ரூபாய் தனக்கு வழங்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளாராம் நடிகர் மன்சூர் அலிகான்.  இந்த வழக்கு வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதன் பிறகு தான் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *