தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிம்பு. அடுத்ததாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் சிம்புவும், நயன்தாராவும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு உயிருக்கு உயிராக காதலித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பின்னர் இருவருக்கும் இடையே,
ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதன் பிறகு நயன்தாராவுக்கு திருமணமும் ஆகிவிட்டது . ஆனாலும் தற்போது அவரை விடாமல் இருக்கிறார் சிம்பு . அந்த வகையில் சமீப காலமாக பார்ட் 2 கலாச்சாரம் என்பது பெரிய அளவில் பரவி வருகிறது. இதனால் தன்னுடைய ,
சூப்பர் ஹிட் படத்தையும் இரண்டாம் பாகமாக உருவாக்க உள்ளாராம் சிம்பு. அந்த வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் துரை இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தொட்டி ஜெயா. கேங்ஸ்டர் படமாக உருவான இந்த திரைப்படம் சிம்புக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் இந்தப் படத்தின்,
இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம் . அப்படி இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை கோபிகா நடித்திருந்தார் . இரண்டாம் பாகத்தில் கோபிகாவுக்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம் சிம்பு . அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்திலும்,
நடிகை நயன்தாரா தான் நடிக்க இருந்தாராம் . இதனால் இரண்டாவது பாகத்திலாவது அவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணமானாலும் நயன்தாராவை சிம்பு விட மாட்டார் போல என்று கூறி வருகின்றனர்…