90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ. கடந்த 1988 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை குஷ்பூ . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வருஷம் 16 ,கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன் ,சின்னத்தம்பி, மன்னன், ரிக்சா மாமா ,சிங்காரவேலன்,
அண்ணாமலை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை குஷ்பூ . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2000 ஆண்டு இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பூ. திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் பிஜேபி கட்சியில் இருக்கும் நடிகை குஷ்பூ,
தன்னுடைய மாமியாரின் பல நாள் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார். அந்த வகையில் சுந்தர் சி யின் அம்மாவான தெய்வானை அவர்களுக்கு மோடியை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அதை தற்போது நிறைவேற்றி வைத்திருக்கிறார் நடிகை குஷ்பூ.
மேலும் நரேந்திர மோடியும் குஷ்புவின் மாமியாரிடம் ஆசி பெற்று சென்றார் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு மருமகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்று கூறி வருகின்றனர்…