தற்போதுள்ள பல இளம் நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் கமல்ஹாசன். காரணம் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இவரைப் பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக விக்ரம் படத்திற்கு பிறகு கொடிகட்டி பறந்து வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 , எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம்,
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய வரும் தக் லைஃப் என்று மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் கமல்ஹாசன். என்னதான் கமல்ஹாசன் சினிமாவில் பெயர் புகழை சம்பாதித்தாலும் , அதே நேரத்தில் சர்ச்சைகளையும் சம்பாதித்தார் என்று தான் சொல்ல வேண்டும் .
அப்படி ஏற்கனவே திருமணமான கமல்ஹாசன் நடிகை கௌதமியுடன் 13 வருடங்கள் ஒன்றாக இருந்து வந்தார். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து நம்மவர் , குருதிப்புனல் ,அபூர்வ சகோதரர்கள் ,தேவர் மகன், பாபநாசம் போன்ற படங்களிலும் ஒன்றாக நடித்துள்ளனர் ,
என்பது குறிப்பிடத்தக்கது . இதற்கும் அப்போது கௌதமிக்கு ஒரு மகளும் இருந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென கமலை விட்டு பிரிந்து விட்டார் நடிகை கௌதமி . இப்படி இருக்கும் நிலையில் கௌதமி கமல்ஹாசனை பிரிந்ததற்கான காரணத்தை,
வெளிப்படையாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் 13 வருடங்களாக கமலுடன் வாழ்ந்து வந்த கௌதமி மகளை பாதுகாப்பதற்காக தான் பிரிந்ததாக பரபரப்பை கிளப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்…