கடந்த சில வருடங்களுக்கு முன்பே இந்தியன் 2 படத்தை கமல்ஹாசனை வைத்து தொடங்கினார் இயக்குனர் ஷங்கர் .இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தினால் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . இதனால் இந்த படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. இதன் பிறகு பல வருடங்கள் கழித்து தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே ஒரு சபிக்கப்பட்ட படம் போல தான் இருந்து வருகிறது . காரணம் ஆரம்பத்தில் மூன்று பேரை காவு வாங்கிய இந்த படம் பின்னர் இந்த படத்தில் நடித்த நெடுமுடி வேணு, விவேக் ,மனோபாலா, மாரிமுத்து போன்ற நடிகர்களும் இறந்து விட்டனர் .
இதனால் பலரும் இந்தியன் 2 படத்தை இதோடு நிறுத்தி விடுங்கள் என்று கூறி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இதையெல்லாம் பார்த்த இயக்குனர் ஷங்கர் வெறுத்து போய் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அந்த வகையில் தெலுங்கில் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர்,
என்ற படத்தையும் , கமலை வைத்து இந்தியன் 2 படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கிக் கொண்டு வந்தார் இயக்குனர் ஷங்கர் . ஆனால் இந்த இரண்டு படங்களுமே இன்னும் முடிந்த பாடில்லை. இதனால் தற்போது கேம் சேஞ்சர் படத்தை நிறுத்திவிட்டு இந்தியன் 2 படத்தை ,
முடிப்பதற்கு தயாராகிவிட்டாராம் இயக்குனர் ஷங்கர் . இதனால் இந்த படம் இந்த ஆண்டிற்குள் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது …