ஸ்ரேயா சரண் ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது மழை படத்தின் மூலம் தான். பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து,
திருவிளையாடல் ஆரம்பம் ,சிவாஜி ,அழகிய தமிழ் மகன் ,கந்தசாமி ,தோரணை , உத்தமபுத்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் நடிகை ஸ்ரேயா தமிழ் , தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும்,
நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி எல்லா மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வந்த நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்ட்ரெய் கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இவர்களுக்கு தற்போது இரண்டு வயதில் ,
ஒரு மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் திருமணம் ஆகியும் கூட கவர்ச்சியை விடமாட்டேன் என்பது போல இருந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா . அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்ரேயா 41 வயதிலும் ,
ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…