சசிகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் பிரபல இயக்குனர்களான பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் சசிகுமார் . பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார். இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த,
தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் சசிகுமார். பின்னர் ஈசன் என்ற படத்தை மட்டும் இயக்கி இருந்த சசிகுமார் ஒரு கட்டத்தில் முழுநேர நடிகராகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான,
நாடோடிகள், போராளி ,சுந்தரபாண்டியன் ,குட்டிப்புலி , தாரை தப்பட்டை , அயோத்தி போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல் இவர் ஒரு சில படங்களை தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சசிகுமார் ,
என்று சொன்னாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது அவருடைய தாடி தான் . அப்படி இதுவரை எந்த படத்திலும் சசிகுமார் தாடி இல்லாமல் நடித்ததே கிடையாது . இப்படி இருக்கும் நிலையில் சசிகுமார் தாடி இல்லாமல் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி,
வைரலாகி வருகிறது . ஆனால் அது ரசிகர்கள் எடிட் செய்த புகைப்படம் தான். இருந்தாலும் பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …