April 29, 2024

மர்மமாகவே இருந்த கலாபவன் மணியின் மரணம் ..!! 7 வருடங்கள் கழித்து வெளியான திடுக்கிடும் தகவல் ..!! கேட்டதும் அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!

மறைந்த கலாபவன் மணி ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் ஆவார்.  ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய கலாபவன் மணி பின்னர் அந்த பிரபலத்தை வைத்து படங்களில் நடிக்க தொடங்கினார் . அப்படி மலையாள திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக கொடிகட்டி பறந்து வந்த கலாபவன் மணி தமிழில் வெளியான மறுமலர்ச்சி ,வாஞ்சிநாதன் ,

ஜெமினி ,தென்னவன் ,ஜே ஜே ,புதிய கீதை, குத்து ,செம ரகளை,ஜித்தன் ,அந்நியன் ,ஆறு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  மேலும் இவருடைய நடிப்பிற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது . அதோடு  இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம்,

மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வந்த கலாபவன் மணி கடந்த 2016 ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டார் . இப்படி இருக்கும் நிலையில் இவர் இறந்து 7 வருடங்கள் கழித்து,

அவரின் மரணம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் அவரது வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது,  கலாபவன் மணி தினமும் எல்லை மீறி 12 முதல் 13 பீர் குடித்து வந்திருக்கிறார்.  இதனால் கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி,

வந்த போதும் கூட அவர் குடிப்பதை நிறுத்தவில்லையாம். அதோடு அவர் இறந்த அன்றைக்கு கிட்டத்தட்ட 12 பீர் குடித்து இருக்கிறார் . அவருடைய மரணத்திற்கு காரணம் பீர் தான்.  இப்படி பீர் குடித்து குடித்து அவருடைய மரணத்தை அவரே தேடிக்கொண்டார் என்று கூறியிருந்தார் அந்த ஐபிஎஸ் அதிகாரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *