கிட்டத்தட்ட தமிழ் சினிமா உலகில் 48 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த சூப்பர் ஸ்டாருக்கு சமீபத்தில் வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை . இதனால் ஜெயிலர் படத்தை மலை போல நம்பியிருந்த ரஜினிக்கு இந்த படம் கைவிடவில்லை,
என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் இந்த படத்திற்கு ரஜினிக்கு சம்பளத்தை சேர்த்து கொடுத்தது,
மட்டுமில்லாமல் விலை உயர்ந்த சொகுசு காரையும் பரிசாக கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் . இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரஜினி , நான் இப்போதுதான் பணக்காரனாக உணர்கிறேன் என்று கூறியிருந்தார் . ஆனால் அதற்கு பின்னால்,
பெரிய கதையே உள்ளதாம் . அதாவது ஆரம்ப காலகட்டத்தில் ரஜினிகாந்த் தயாரிப்பு நிறுவனத்தின் காரில்தான் செல்வாராம் . அப்படி எல்லோரையும் இறக்கி விட்ட பிறகு கடைசியாக தான் ரஜினியை இறக்கி விடுவார்களாம். அப்போது ரஜினிக்கு பசி ஓவராகி மயக்கமே,
வந்துவிடுமாம் . அதன் பிறகு பல சொகுசு கார்களை வாங்கி இருந்தாலும் முதல்முறையாக தயாரிப்பாளர் பணத்தில் ஒரு கார் பரிசாக கிடைத்த போது நெகிழ்ச்சியில் இருந்து வருகிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் …